Chennai Rains: தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை - 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


சில இடங்களில் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.